சென்னை:திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை கழகம் மற்றும் கொடைக்கானலில் உள்ள அன்னை தெரசா பெண்கள் பல்கலை கழகத்திற்கு, துணைவேந்தர்களை தேர்வு செய்ய, தேர்வுக் குழு அமைத்து அரசு உத்தரவிட்டுள்ளது.
அன்னை தெரசா பெண்கள் பல்கலை துணைவேந்தரை தேர்வு செய்யும் குழுவில், உடுமலைப்பேட்டை ஜி.வி.ஜி., விசாலாட்சி பெண்கள் கல்லுாரி முதல்வர் மஞ்சுளா, காந்திகிராம ஊரக பல்கலையின் முன்னாள் துணைவேந்தர் பங்கஜம், திருச்சி பாரதிதாசன் பல்கலையின் முன்னாள் துணைவேந்தர் மீனா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை துணைவேந்தர் தேர்வு குழுவில், மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லுாரி தலைவர் கண்ணன், வழக்கறிஞர் அகமதுகான், நாகராஜன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.இக்குழுவினர், துணைவேந்தர் பதவிக்கு மூன்று பேரை பரிந்துரை செய்வர்.
No comments:
Post a Comment
குறிப்பு: கல்வி சம்பந்தமான அனைத்து செய்திகளும், அனைத்து மெட்டீரியல்களும் உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ அட்மினுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
-அன்புடன் ஆட்சியர் கனவு குழு