Pages

    ஜாக்டோ கூட்டத்தின் முக்கிய முடிவுகள் ஆசிரியர் தகுதித் தேர்வு குறித்து திரு.மீனாட்சி சுந்தரம் அவர்களும் மற்றும் ஏனைய கோரிக்கைகள் குறித்து ஒவ்வொரு பிரதி நிதியும் பேச உள்ளனர்



    இன்று காலை 11 மணி முதல் 1.30 மணி வரை ஜாக்டோ உயர்மட்ட பொறுப்பாளர்கள் கூட்டம் சென்னையில் கூடியது. நேற்றைய தினம் தமிழக அரசு, ஜாக்டோ சார்பில் 5 பிரதிநிதிகள் பன்கு பெற அனுமதி வழங்கியது. இதையடுத்து இன்று கூடிய ஜாக்டோ கூட்டத்தில் அனைத்து ஜாக்டோ உயர்மட்ட பொறுப்பாளர்கள் அனைவரும் பங்குபெற வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. பின்பு இயக்குனர் அவர்கள் ஜாக்டோ சார்பில் 10 பேர் பங்குபெறலாம் என தெரிவித்தார்.



    21 பிரதி நிதிகளும் பேச்சுவார்த்தையில் பங்குபெற வேண்டுமென ஜாக்டோ சார்பில் திரு.செ.முத்துசாமி, திரு.ரங்கராஜன், திரு.ராபின்சன், திரு.முருகேசன், திரு.சாமி சத்தியமூர்த்தி, திரு.இளங்கோவன் ஆகியோர் தலைமை செயலகம் சென்று பேச்சுவார்த்தை நடத்தியதில் 21 பிரதி நிதிகளும் பேச்சுவார்த்தையில் பங்குபெறலாம் என அரசால் இசைவு தெரிவித்துள்ளனர்.



    இன்று பிற்பகல் அரசுடனான பேச்சுவார்த்தையில்,

    *இடைநிலை ஆசிரியர் ஊதியப் பிரச்சனை குறித்து திரு.ரங்கராஜன் அவர்களும்,

    *பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் குறித்து திரு.செ.முத்துசாமி அவர்களும்,

    *ஆசிரியர் தகுதித் தேர்வு குறித்து திரு.மீனாட்சி சுந்தரம் அவர்களும் மற்றும் ஏனைய கோரிக்கைகள் குறித்து ஒவ்வொரு பிரதி நிதியும் பேச உள்ளனர் என தகவல் தெரிவிக்கின்றன.


    தகவல் : தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி

    No comments:

    Post a Comment

    குறிப்பு: கல்வி சம்பந்தமான அனைத்து செய்திகளும், அனைத்து மெட்டீரியல்களும் உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்

    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ அட்மினுக்கு முழு உரிமை உண்டு.
    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.

    -அன்புடன் ஆட்சியர் கனவு குழு